யாழில் விபரீத முடிவை எடுத்த சிறுவன்! அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்
தாயார் கண்டித்ததன் காரணமாக விபரீத முடிவை எடுத்த சிறுவனொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பொலிகண்டி தெற்கு வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த அசோக் ரவி ரஹிம்சன் (வயது 12) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
பூமாலை கட்டும் பொழுது சகோதரிக்கும், இளைய தம்பியான அசோக் ரவி ரஹிம்சனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை அவதானித்த தாயார், சகோதரிக்கு இடையூறு விளைவித்த சிறுவனை அடித்துள்ளார்.
இதனையடுத்து சிறுவனை நீண்ட நேரமாக காணாத நிலையில் உறவினர்கள் சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் குற்றுயிராக காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.